Monday, February 18, 2008

TEMPLE OF THE TOOTH (SRI DALADA MALIGAWA) - KANDY,SRILANKA.







4 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரிஷான்!
இந்தத் தலதா மாளிகையையும் , பெரகரா ஊர்வலமும் இருதடவை நேரில் பார்த்துள்ளேன். மிக அழகாகவும் அமர்க்களமாகவும் இருக்கும்; கண்டிய நடனத்தில் ஒலிக்கும் பேரிகை அதிர்வு எனக்கு
மிகப்பிடிக்கும்.
இங்கும் தொலைக்காட்சியில் இந்த பெரகெரா ஊர்வலம் காட்டிய போது; இன்று உலகத்தில் உள்ள
மிகப் பழைமையான சமய ஊர்வலம் எனக் குறிப்பிட்டார்கள்.
அப்போது தியவதன நிலமே யாக இருந்த நிரஞ்சன் விஜயரத்ன பிரஞ்சில் பேட்டி கொடுத்தார்.
நடனச் சிறுவர்களின் படம் மிக அருமை. கலைஞர்களுக்கே உரிய ;தம்மை யாரும் மதிக்கும் போது
வரும் கம்பீரமும்; மகிழ்வும் இதில் பலிச்சிடுகிறது.

M.Rishan Shareef said...

அன்பின் யோகன்,
//இந்தத் தலதா மாளிகையையும் , பெரகரா ஊர்வலமும் இருதடவை நேரில் பார்த்துள்ளேன். மிக அழகாகவும் அமர்க்களமாகவும் இருக்கும்; கண்டிய நடனத்தில் ஒலிக்கும் பேரிகை அதிர்வு எனக்கு
மிகப்பிடிக்கும்.//

இந்த அனுபவங்கள் எனக்கும் இருக்கின்றன.ஒவ்வொரு வருடமும் இந்தப் பெரஹர எனது ஊரின் பிரதானவீதியில் செல்லும்.நள்ளிரவில் செல்லும் இப்பெரஹரயைக் காண மாலை 6 மணிக்கே பக்கத்து ஊர்க் கிராம மக்கள் தம் கைக்குழந்தைகள் முதல் வயோதிபர்கள் வரை பாய்,படுக்கைகளோடு எனது ஊருக்கு வந்து வீதியோரத்தில் இடம்பிடித்து விடுவார்கள்.
நான் நண்பர்கள் சகிதம் தூரத்தில் பேரிகைச் சத்தம் கேட்கும்போது வீதிக்கு வருவேன்.
புதிதாய் வீதியோரக்கடைகள் முளைத்திருக்க,மக்கள் ஆர்வமாய் பெரஹர பார்க்க, அலங்கரிக்கப்பட்ட யானைகள் வீதியில் அழகாய் அசைந்துவரும்.முன்னும் பின்னும் நடனக்கலைஞர்களும்,வித்தை காட்டுபவர்களும் ஆடி வருவார்கள்.

//தொலைக்காட்சியில் இந்த பெரகெரா ஊர்வலம் காட்டிய போது; இன்று உலகத்தில் உள்ள
மிகப் பழைமையான சமய ஊர்வலம் எனக் குறிப்பிட்டார்கள்.//

மிக மகிழ்வாய் இருக்கிறது.
கலை அழிந்துபோகாமல் காக்கப்படவேண்டும்.


//நடனச் சிறுவர்களின் படம் மிக அருமை. கலைஞர்களுக்கே உரிய ;தம்மை யாரும் மதிக்கும் போது
வரும் கம்பீரமும்; மகிழ்வும் இதில் பலிச்சிடுகிறது.//

ஆமாம்.கண்டிய நடனம் உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட அழகிய நடனம்.தற்போது அதனைப் பயிலுபவர்கள் அருகியே வருகிறார்கள்.
வெற்றிகரமாக ஆடிக்கலைத்த அல்லது சிறப்பாக ஆடவேண்டுமென்ற ஆவலோடு கம்பீரமாகப் புன்னகைக்கிறார்கள்...:)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

KARTHIK said...

ஷெரிப் அந்த இரண்டாவது படம் அருமை
என்ன cemra பயன்படுத்துகிறீர்கள்.
இதிலும் http://photography-in-tamil.blogspot.com/ கலந்துகொள்ளுங்கள் ஷெரிப்.
புகை படங்களை பதிய blogger ரை விட wordpress சிறந்ததாக இருக்கும்.முயன்று பாருங்கள் ஷெரிப்.

M.Rishan Shareef said...

வாங்க கார்த்திக்.. :)
எனது camera SONY DSC-W30.
அந்தப் போட்டியில் கண்டிப்பாகக் கலந்துகொள்கிறேன் நண்பரே.
வருகைக்கும்,கருத்துக்கும்,முகவரிக்கும் நன்றி நண்பரே... :)